டியூஷனுக்கு சென்ற மகளை தேடிய பெற்றோர்.. பவானி ஆற்றில் சடலமாக கிடந்த அதிர்ச்சி

Update: 2023-07-09 07:00 GMT

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் மாயமான பள்ளி மாணவி, பவானி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டார். தாசம்பாளையம் பகுதி அருகே வசித்து வருபவர் காதர். இவரது 13 வயது மகள், எட்டாம் வகுப்பு படித்து வந்த நிலையில், கடந்த 5-ஆம் தேதி டியூஷனுக்கு சென்ற பின்னர் வீடு திரும்பவில்லை எனத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து, போலீசில் புகாரளிக்கப்பட்ட நிலையில் காணாமல் போன மாணவி, நேற்று மாலை பவானி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டார். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்