பாம்பனில் நிகழ்ந்த அதிபயங்கர சம்பவம்..! கடலுக்குள் பாயவிருந்த பேருந்துகள் - திக்..திக் காட்சிகள்..!

Update: 2022-10-12 08:52 GMT

ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில், அரசு பேருந்தும் தனியார் சொகுசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், ஓட்டுநர் உள்பட எட்டு பேர் காயமடைந்தனர்.

சென்னையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற தனியார் சொகுசு பேருந்து, பாம்பன் பாலத்தில் எதிரே வந்த அரசுப் பேருந்து மீது மோதியது. இதில், கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து, பாலத்தின் தடுப்பு சுவர் மீது ஏறியது.

இதையறிந்த மீனவர்கள், பேருந்துக்குள் சிக்கிய ஓட்டுநரை கயிறு கட்டி மீட்டனர்.

இதில் காயமடைந்த ஓட்டுநர் உள்பட எட்டு பேர், ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்து காரணமாக, பாம்பன் பாலத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதனிடையே, சம்பவ இடத்துக்கு விரைந்த பாம்பன் போலீசார், போக்குவரத்தை சீரமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்