நர்சிங் கல்லூரி மாணவர் தூக்குபோட்ட சம்பவம்...தற்கொலையா? கொலையா? கோணத்தில் போலீசார் விசாரணை

Update: 2023-01-30 18:23 GMT

தஞ்சாவூரை சேர்ந்த சுமித்திரன் என்பவர், படந்தாலுமூடு பகுதியில் இயங்கி வரும் கல்லூரி விடுதியில் தங்கி இருந்து, செவிலியர் பாடப்பரிவில் 2ம் ஆண்டு படித்து வந்தார்.

வகுப்பு முடிந்து தனது அறைக்கு வந்த சுமித்திரன், நள்ளிரவு நேரத்தில், விடுதியின் மேல்மாடியில் இருந்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், உயிரிழந்த மாணவனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக, பெற்றோர் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவன் இறந்த செய்தியை, கல்லூரி நிர்வாகம் தெரிவிக்கவில்லை எனக் கூறும் பெற்றோர், உண்மையான காரணம் எதுவும் கூறாததால், கல்லூரி நிர்வாகம் மீது சந்தேகம் இருப்பதாகவும் அந்தப் புகாரில் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்