சீமானின் ட்விட்டர் கணக்கு முடக்கம் - மத்திய அரசால் ட்விட்டர் அதிரடி

Update: 2023-05-31 20:50 GMT

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அக்கட்சியினர், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கி வருகின்றனர். இந்நிலையில் சீமான் உட்பட, நாம் தமிழர் கட்சியின் இருபதுக்கும் மேற்பட்ட நிர்வாகிகளின் ட்விட்டர் கணக்குகளை, இந்தியாவில் தற்காலிகமாக தடை செய்வதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. மத்திய அரசின் அறிவுறுத்தலில் சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று, சீமானின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள சீமானின் ஆதரவாளர்கள், ட்விட்டர் நிறுவனத்திற்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்