காரைக்குடியில், மாயமான செல்போன் டவர்... காவல்நிலையத்தில் தனியார் நிறுவனம் சார்பில் புகார்

Update: 2023-04-02 15:22 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செயல்படாமல் இருந்த செல்போன் டவரைக் காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காரைக்குடி புது சந்தைப்பேட்டை பகுதியில் செல்வலிங்கம் என்பவருக்கு சொந்தமான இடத்தில், தனியார் நிறுவனம் சார்பில் வைக்கப்பட்டிருந்த ஏர்செல் செல்போன் டவர், கடந்த 2017ம் ஆண்டு வரை இயங்கி வந்தது. பின்னர், ஏர்செல் நிறுவனம் மூடப்பட்டதால், அந்த டவரை சம்பந்தப்பட்ட நிறுவன மேலாளர் பார்வையிட வந்துள்ளார். அப்போது செல்போன் டவர் மாயமனதால், காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்