2 குழந்தைக்கு தந்தை...16 வயது சிறுமி உடன் காதல் - தப்பி ஓடிய ஜோடியை தட்டி தூக்கிய போலீஸ்

Update: 2022-12-14 02:33 GMT

கன்னியாகுமரி அருகே 16 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய 36 வயதான நபர் மீது 2வது முறையாக போக்சோ வழக்கு பாய்ந்தது.

சுசீந்திரத்தை சேர்ந்த 36 வயதான மார்க்கண்டேயனுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில் அவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளார்.

பின்னர் 2021ல் சிறுமியுடன் தலைமறைவான அவர் ஏற்கனவே போக்சோவில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்தார்.

இந்த நிலையில் மீண்டும் சிறுமியுடன் மாயமான நிலையில் அவர் ஒசூரில் அதே சிறுமியுடன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி குடும்பம் நடத்தி வந்தது தெரியவரவே போலீசார் அவரை 2வது முறையாக போக்சோவில் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்