பழனி முருகன் கோவிலில் 27ம்தேதி கும்பாபிஷேகம் - உழவாரப் பணிகளில் ஈடுபட்டுள்ள சிவனடியார்கள்

Update: 2023-01-21 12:41 GMT

பழனி தண்டாயுதபாணி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, சிவனடியார்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தண்டாயுதபாணி சாமி கோவில் கும்பாபிஷேகம், வருகின்ற 27ம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதில் இருந்து வந்துள்ள மூன்று ஆயிரத்திற்கும் அதிகமான சிவனடியார்கள், படிப்பாதை, கிரிவல பாதை, யானை பாதை உள்ளிட்ட பல்வேறு இடங்களில், உழவாரப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்