"குளித்தலை அரசு மருத்துவமனையை காணவில்லை" - போஸ்டரால் பரபரப்பு

Update: 2022-09-28 11:53 GMT

கரூர் மாவட்டம் குளித்தலை அரசு தலைமை மருத்துவமனையை காணவில்லை என நகர் முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குளித்தலை பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையை, மாவட்ட தலைமை மருத்துவமனையாக தமிழக சுகாதாரத்துறை தரம் உயர்த்தி உள்ளது.

ஆனால் அரசு மருத்துவமனையில் பெயர் பலகை இன்றும் மாற்றப்படவில்லை.

இதனால் ஏற்பட்ட குழப்பத்தினால், குளித்தலை நகர் பகுதி முழுவதும் "குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை காணவில்லை" என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்