"மலை கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கியவர் கருணாநிதி" - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Update: 2023-07-19 01:47 GMT

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மலைவாழ் மக்கள் நிம்மதியாகவும் தங்களது அடையாளத்தை தொலைக்காமலும் வாழ்ந்து வருகிறார்கள் என்றும், இதற்கு காரணம் திமுக தான் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை ஜவ்வாது மலையில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு நாட்கள் கோடை விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதிஸ்டாலின், அங்கு காட்சிப்படுத்தப்பட்ட பழங்கள்,காய்கறிகள், பூக்கள் ஆகியவற்றால் அமைக்கப்பட்ட உருவங்களை கண்டு ரசித்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், 50 ஆண்டுகளுக்கு முன்பே மலை கிராம பழங்குடி மக்களுக்கு மின்சார வசதி செய்து தந்தவர் கலைஞர் கருணாநிதி என்று புகழாரம் சூட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்