"எம்.பி.க்களின் பேச்சுரிமையை மறுக்கும் மத்திய அரசு" - மக்கள் நீதி மய்யம் குற்றச்சாட்டு

Update: 2022-07-14 21:46 GMT

மத்தியில் ஆளும் அரசு, எம்.பி.க்களின் பேச்சுரிமையை மறுப்பதாக, மக்கள் நீதி மய்யம் குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து, கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நாடாளுமன்ற இரு அவைகளிலும் தடை செய்யப்பட்ட வார்த்தைகள் என்று பட்டியலிட்டு, மக்களவைச் செயலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

பிரதமர், அமைச்சர்களுக்கு எதிராக யாரும் பேசக்கூடாது என்று கருதுவது ஆபத்தானது என்றும், பாராட்டுகளை மட்டுமே கேட்டுக் கொண்டிருக்க மன்னராட்சி முறை நடக்கிறதா?என கேள்வி எழுப்பியுள்ளார். வள்ளுவரைப் பற்றிப் பேசும் பிரதமருக்கு, இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்' கதியை சுட்டிக்காட்ட யாருமில்லையா? என்றும், ஹிட்லராக மாற இது ஜெர்மனி அல்லவே என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்