ஆனைமலைக்கு படையெடுத்த ஜப்பானியர்கள் - கோவிலில் சாமி தரிசனம்

Update: 2023-05-21 01:53 GMT

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் ஜப்பானியர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஜப்பான் நாட்டில் இருந்து ஜப்பான் சிவ ஆதீனம்

பாலகும்ப குருமுனி தலைமையில் 30 பேர் பழனியில் நடைபெற்ற போகர் ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டனர். தொடர்ந்து உலக நன்மை வேண்டி, தமிழகத்தில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு செய்ய முடிவு செய்து, நடத்தி வருகின்றனர். அதன்படி, ஆனைமலை மாசாணியம்மன் கோயிலுக்கு வந்த ஜப்பானியர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, அவர்கள் சிறப்பு பூஜை செய்ததுடன் கோயில் வளாகத்தில் அமர்ந்திருந்து தியானம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்