சென்னை கிண்டி ஐ.டி.ஐ. அலுவலகத்தில் போராட்டம்

Update: 2022-12-28 01:56 GMT

அவுட் சோர்சிங் மூலம் நடத்தப்படும் பணி நியமனங்களுக்கு வழி வகை செய்யும் 115,139, 152 அரசாணைகளை, ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. சென்னை கிண்டி ஐ.டி.ஐ. அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தலைவர் மு. அன்பரசு தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான ஊழியர்கள் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர். போராட்டத்திற்கு பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தலைவர் மு. அன்பரசு, தனியார் நிறுவனங்களுடன் இணைந்து ஒப்பந்த பணியாளர்களை நியமிப்பது தான் திராவிட மாடலா? "என கேள்வி எழுப்பினார்.

Tags:    

மேலும் செய்திகள்