இது வகுப்பறையா.. இல்ல பார்க்கிங்கா? - டூ வீலரை வகுப்பறைக்குள் நிறுத்தி வைத்திருக்கும் ஆசிரியர்கள்

Update: 2022-09-13 14:57 GMT

விருத்தாசலம் அருகே அரசு பள்ளியில், அங்கு பணியாற்றிவரும் ஆசிரியர்களே வகுப்பறையில் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி வைத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கோமங்கலம் அரசு ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளியில், 40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பள்ளியின் வகுப்பறையில் ஆசிரியர்களின் இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைத்து இருப்பதால் மாணவர்கள் அமர்வதற்கு சிரமப்பட்டு வருகின்றனர்.

இதனால் மாவட்ட கல்வி துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்