ஐபிஎல் 2023 - லக்னோவை பழிதீர்த்த RCB

Update: 2023-05-02 01:57 GMT

ஐ.பி.எல் தொடரின் 43ஆவது லீக் போட்டியில், பெ​ங்களூரு அணி வெற்றி பெற்றது. லக்னோவில் உள்ள ஏக்னா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் டூபிளஸ்ஸி 44 ரன்களும், விராட் கோலி 31 ரன்களும் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய லக்னோ அணி, 108 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதன் மூலம் 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்