"ஆசையை நிறைவேற்றினால் குழந்தை பிறக்கும்" - பெண்ணை மிரட்டிய சாமியார்.. வற்புறுத்திய கணவர் - ஆத்திரத்தில் மனைவி செய்த பகீர் செயல்

Update: 2023-04-18 13:21 GMT

கோவை பொன்னையராஜபுரம் பகுதியை சேர்ந்த நேத்ராவதி - கார்த்திக் லட்சுமி நாராயணன் தம்பதிக்கு இடையே கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

ஆனால், இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. பணி நிமித்தம் காரணமாக இருவரும் பெங்களூருவில் தங்கியிருந்த நிலையில், குழந்தை வரம் வேண்டி, மத்தியபிரதேசத்தில் உள்ள ஆசிரமத்தில், சாமியாரை சந்தித்துள்ளனர்.

இதனிடையே, தனது ஆசையை நிறைவேற்றினால், குழந்தை பிறக்கும் என்றும், மறுத்தால் கணவனிடம் இருந்து பிரித்து விடுவேன் என்றும் நேத்ராவதியை, சாமியார் மிரட்டியதாக கூறப்படுகிறது.

மேலும், கணவன் கார்த்திக்கும், சாமியார் விருப்பப்படி நடந்துகொள் எனக் கூறியுள்ளார்.

இதில், ஆத்திரமடைந்த நேத்ராவதி, சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில், கோவை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில், கணவன் மீது புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக, கணவர் கார்த்திக்கிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்