"வெற்றி பெற்றதும் அழுதேன்" - டென்னில் வீரர் சத்யன் ஞானசேகரன்

Update: 2022-08-11 02:22 GMT

காமன்வெல்த் போட்டியில் தங்கம் உள்பட 3 பதக்கங்களை வென்ற வீரர் சத்யன் ஞானசேகரனுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய 3 பதக்கங்களை வென்ற சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த வீரர் சத்யன் ஞானசேகரன் நேற்று சென்னை வந்தார்.

விமான நிலையத்தில் அவரை குடும்பத்தினரும் நண்பர்களும் உற்சாகமாக வரவேற்றனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சத்யன், கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசும், தமிழக அரசும் செய்த உதவியால் காமன்வெல்த் போட்டியில் பதக்கங்களை வெல்ல முடிந்ததாக கூறினார்.

அதற்காக, மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்