பேத்தியை கழுத்தை நெறித்து கொன்ற பாட்டி... சேலத்தில் அதிர்ச்சி - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Update: 2023-02-08 14:57 GMT

சேலத்தில் பேத்தியை பாட்டியே கொலை செய்த சம்பவத்தில் ஒரு வார காலத்திற்குள் பாட்டியின் உடல்நலம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சேலம் சூரமங்கலம் போடிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த விமல்குமார் - மேகலாவின் 4 வயது மகள், தன் பாட்டி சாந்தியால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். கொலை செய்த சாந்திக்கு மனநிலை பாதிப்பு இருந்ததாக கூறப்பட்ட நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில்

சாந்திக்கு சான்று பெற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் தற்போதைய மனநிலை குறித்து முதற்கட்ட மதிப்பீட்டை நடத்தி, 7 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையின் முதல்வருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து சாந்தி மனநல சிகிச்சை பிரிவில் காவல்துறையினர் பாதுகாப்பு அனுமதிக்கப்பட்டுள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்