அரசு மருத்துவமனைக்கு ரூ. 20 கோடி சொத்துக்களை வழங்கிய NRI மருத்துவர் - ஆந்திராவில் நெகிழ்ச்சி சம்பவம்

Update: 2022-10-11 13:14 GMT

ஆந்திராவில் அரசு பொது மருத்துவமனைக்கு NRI மருத்துவர் தனது 20 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை நன்கொடையாக வழங்கியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் உமா தேவி கவினி, 1965 ஆம் ஆண்டு குண்டூர் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் முடித்தார். பின்னர், உயர்கல்வியைத் தொடர்ந்த அவர், ஏறக்குறைய நான்கு தசாப்தங்களுக்கு முன்பு அமெரிக்காவுக்குச் சென்று அங்கு குடியேறினார். டாக்டர் உமா தேவி தற்போது அமெரிக்காவில் நோய் எதிர்ப்பு மற்றும் ஒவ்வாமை நிபுணராக பணியாற்றி வருகிறார். வட அமெரிக்காவில் உள்ள குண்டூர் மருத்துவக் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் 17வது ரீயூனியன் நிகழ்ச்சியில் பங்கேற்ற உமா தேவி குண்டூர் அரசு பொது மருத்துவமனைக்கு 20 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை நன்கொடையாக வழங்கியுள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்