ஆசையாய் வளர்த்த ஆடு..! - கல்லூரி மாணவன் எடுத்த விபரீத முடிவு

Update: 2022-08-17 13:44 GMT

மேட்டூர் அருகே தந்தை வாங்கிய கடனை கேட்டு மிரட்டியதால் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டூர் அருகே வெள்ளை கரடு பகுதியை சேர்ந்த நிர்மல்ராஜ், தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவரது தந்தையான ஆனந்தன், அதே பகுதியை சேர்ந்த சுதாகர் என்பவரிடம் 40 ஆயிரம் ரூபாய் கடனாக வாங்கி இருந்தார். இதில் 20 ஆயிரம் பணத்தை மட்டும் வட்டியுடன் திருப்பி செலுத்தியிருந்தார். மீதமுள்ள பணத்தை கேட்டு சுதாகர் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், ஆனந்தன் வீட்டுக்கு வந்த சுதாகர், பணத்தை திருப்பிதராவிட்டால் ஆட்டை பிடித்துச் செல்வதாக கூறியுள்ளார். தான் ஆசையாக வளர்த்து வரும் ஆட்டை எடுத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவித்து நிர்மல்ராஜ் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பணம் தரவில்லை எனில் அடுத்த முறை ஆட்டை பிடித்து செல்வதாக கூறிவிட்டு சுதாகர் சென்றுள்ளார். இதனால் மனஉளைச்சல் அடைந்த நிர்மல்ராஜ், தாயாரின் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக நங்கவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுதாகரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்