கஞ்சா வியாபாரி சரமாரி வெட்டி கொலை! பழிக்குப் பழியா..? 5 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்

Update: 2022-10-01 05:26 GMT

சென்னை புளியந்தோப்பு பகுதியில் கஞ்சா வியாபாரி, 5 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார்.

புளியந்தோப்பு காந்தி நகரைச் சேர்ந்த கார்த்திகேயன் என்கின்ற சேட்டு மீது இரண்டு கொலை உட்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

வெள்ளிக்கிழமை இரவு, காந்தி நகர் பேருந்து நிறுத்தம் அருகே நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த கார்த்திகேயனை அங்கு வந்த 5 பேர் கும்பல் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி கார்த்திகேயன் உயிரிழந்தார்.

கார்த்திகேயனுக்கு திருமணமாகி விஜயசாந்தி என்ற மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பேசின் பிரிட்ஜ் போலீசார் வழக்கு பதிவு செய்து, கொலையாளிகளைத் தேடிவருகின்றனர்.

கடந்த 2013-இல் நடந்த கொலைக்கு பழிக்குப் பழியாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்