பாலாற்றில் குளித்த போது ஏற்பட்ட கைகலப்பு - 5 பேர் காயம்

Update: 2023-02-01 00:31 GMT

திருப்பத்தூர் மாவட்டம் திருமாஞ்சோலை பகுதியை சேர்ந்த கஜேந்திரன், வாணியம்பாடி அருகே பாலாற்றில் குடும்பத்துடன் நீராடியுள்ளார்.

அப்போது அங்கு வந்த அச்சமங்கலம் பகுதியை சேர்ந்த 20 பேர் கொண்ட கும்பல் கஜேந்திரனின் குடும்பத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் வாக்குவாதம் முற்றிபோகவே இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் கஜேந்திரன் மற்றும் அவரது குழந்தைகளை சிலர் பீர்பாட்டிலால் தாக்கியுள்ளனர்.

இதில் காயமடைந்த மூவரையும் மீட்ட பொதுமக்கள் அவர்களை வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதே போல் மற்றொரு தரப்பில் காயமடைந்த பெருமாள், திருப்பதி ஆகியோர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 10 பேர் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்