சாலையில் சும்மா நடந்து சென்றவருக்கு தலையில் 12 தையல் - குடிபோதையில் 2 பேர் செய்த அட்டூழியம்

Update: 2022-10-26 12:59 GMT

சாலையில் சும்மா நடந்து சென்றவருக்கு தலையில் 12 தையல் - குடிபோதையில் 2 பேர் செய்த அட்டூழியம்

திருவொற்றியூரில் சாலையில் சென்று கொண்டிருந்த நபரை, குடிபோதையில் தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டனர். சென்னை, திருவொற்றியூரைச் சேர்ந்தவர் ஜெயராம். இவர், நேற்று இரவு பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய போது, குடிபோதையில் இருந்த இருவர், ஜெயராமிடம் மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்துள்ளனர். அவர் பணம் தர மறுக்கவே, ஜெயராமை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் ஜெயராம் 12 தையல்கள் போடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில், தாக்குதல் நடத்திய நவீன் குமார் மற்றும் சண்முகம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்