"ரூ.2000 தரேன் ஆட்டோவை விடு தெய்வமே" போலீசிடம் கெஞ்சிய போதை ஆசாமி - தீயாய் பரவும் வீடியோ

Update: 2023-05-22 05:13 GMT

சென்னை ராயபுரத்தில், மதுபாட்டிலை சாலையில் எரிந்து விட்டு, வேகமாக சென்ற ஆட்டோவை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்தனர். கல்மண்டபம் சிக்னல் அருகே, மதுபாட்டிலை சாலையில் எரிந்து விட்டு, மூன்று பேர் ஆட்டோவில் வேகமாக சென்றதாக தெரிகிறது. இதை பார்த்த போக்குவரத்து போலீசார், ஆட்டோவை பின் தொடர்ந்து வழிமறித்த போது, மதுபோதையில் மூவர் இருந்தனர். ஆட்டோவில் இருந்து இறங்கிய ஒருவர், தனக்கு அரசியல் பிரமுகர்கள் பலரை தெரியும் என, மதுபோதையில் கூறினார். பின்னர், போக்குவரத்து உதவி ஆய்வாளர், ஆட்டோவை எடுத்துச் சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்