"சொன்னபடி கேளு மக்கர் பண்ணாதே"..கயிறை வாயில் கடித்து கொண்டு விரட்டி விரட்டி ஆடு மேய்க்கும் நாய்...

Update: 2022-09-08 11:05 GMT

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே நாய் ஒன்று ஆட்டை மேய்க்கும் காட்சி சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகிறது.

"ஒழுங்கா படிக்கலேனா ஆடு மாடு தான் மேய்க்கணும்" என்று நாம் வீட்டில் திட்டக் கேட்டிருப்போம்...

மனிதர்கள் தான் மெத்தப் படித்த மேதாவிகளாய் தொழில் பேதம் கொண்டிருப்போம்...

நாரைக்கிணரைச் சேர்ந்த நாய் ஒன்று தனது உரிமையாளர் கோவிந்தன் வளர்க்கும் ஆட்டை அழகாக தினமும் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்கிறது...

ஆடு அங்கும் இங்கும் ஓடினாலும் கூட"சொன்னபடி கேளு மக்கர் பண்ணாதே"...

என்று கயிற்றை விட்டு விடாமல் விரட்டி விரட்டி சாமர்த்தியமாக நாய் ஆடு மேய்க்கும் காட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன...

Tags:    

மேலும் செய்திகள்