12 வகைகளில் அறுசுவை உணவு...காவலர்களுக்கு அசத்தல் ஏற்பாடு - கட்டிட பொறியாளரின் சிறப்பான சம்பவம்

Update: 2023-05-08 12:30 GMT

கள்ளழகர் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் மதுரையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே கள்ளழகர் மதுரையிலிருந்து அழகர்மலை செல்லும் பொழுது ஒரு சில மண்டகப் பணிகளில் அன்னதானம் வழங்கப்படும். அதுபோக வெளியூர்களில் இருந்து வரும் காவலர்கள் சாப்பிடுவதற்கு கடைகள் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தனர். இதை உணர்ந்த மதுரையைச் சேர்ந்த கட்டிட பொறியாளர் கமலக்கண்ணன், ஆண்டுதோறும் ஆயிரம் காவலர்கள் மற்றும் 25 ஆயிரம் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டும் 12 வகைகளில் அறுசுவை உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்