பெட்ரோல் கேனுடன் சாலை மறியலில் ஈடுபட்ட தேங்காய் வியாபாரியின் மனைவி மற்றும் உறவினர்கள்

Update: 2023-04-23 07:39 GMT

உசிலம்பட்டி அருகே கணவரை தாக்கியவர்களை கைது செய்ய கோரி, பெண் ஒருவர் உறவினர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பானது. மதுரை மாவட்டம் கொடிக்குளம் பகுதியை சேர்ந்த சந்தனகருப்பு என்பவருக்கும், ஊராட்சி மன்ற தலைவரின் கணவருக்கும் இடையே தேங்காய் வியாபாரத்தில் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் திமுக ஊராட்சி மன்ற தலைவர் வனிதா மற்றும் அவரது கணவர் ராமன் உள்ளிட்ட ஐந்து பேர் சந்தன கருப்புவை தாக்கியதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர்களை கைது செய்ய கோரி பெட்ரோல் கேனுடன் சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்களை, போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின் அப்புறப்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்