தலைக்கேறிய போதை..! நண்பர்களே எதிரியாய் மாறிய கொடூரம்

Update: 2022-06-25 20:42 GMT

சென்னை வியாசர்பாடியில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் தந்தை, மகன் இருவரும் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, வியாசர்பாடி எஸ்.ஏ.காலனியைச் சேர்ந்தவர் குணா. இவர் தனது வீட்டில் அருண் , அசோக், வெங்கடேஷ், பல்லு ரவி ஆகிய நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது குணாவுக்கும், வெங்கடேஷீக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு கைகலப்பாக மாறிய நிலையில், நண்பர்கள் நான்கு பேரும் சேர்ந்து குணாவை சரமாறியாக அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க வந்த குணாவின் தந்தைக்கும் அரிவாளல் வெட்டு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 4 பேரும் தப்பியோடியுள்ளனர். தந்தை மகன் இருவரையும் மீட்ட அக்கம்பக்கத்தினர், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற எம்.கே. வி.நகர் போலீசார் நண்பர்கள் நான்கு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்