30 அடி ஆழ குழி..குளிக்க சென்ற மாணவன் பலி.. போராடி சடலத்தை மீட்ட தீயனைப்பு பணியினர்

Update: 2023-01-26 08:35 GMT

நெல்லையில் கழிவுநீர் உந்தும நிலையம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட குழியில் குளிக்க சென்ற பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை சாந்திநகர் அடுத்த சாந்தா பிலிப் காலனி பகுதியில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக பாதள சாக்கடை திட்டத்தில் நீர் உந்தும நிலையம் அமைப்பதற்காக குழி தோண்டப்பட்டுள்ளது.

சுமார், 30 அடியில் குழி தோண்டப்பட்ட நிலையில், இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பணி கைவிடப்பட்டது.

இந்நிலையில், தோண்டப்பட்ட குழியில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கும் போது அப்பகுதி இளைஞர்கள் குளித்து வந்துள்ளனர்.

இதே போல் நண்பர்களுடன் குளிக்க சென்ற மணக்காவலம் பிள்ளை நகர் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர் மனோஜ் என்பவர் குழியின் ஆழத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சடலத்தை மீட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்