நண்பருடன் நின்று கொண்டிருந்த போது நடந்த சோகம் - திடீரென பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை..

Update: 2023-01-23 12:29 GMT

கோவையில் ஆட்டோ டிரைவர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை வீரியம்பாளையத்தை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ரவி. இவர் சாலையில் ஆட்டோவின் அருகே நின்று நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது, அங்கு வந்த மர்மநபர் ஒருவர் ரவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், படுகாயமடைந்த ரவியை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் ஆட்டோ ஓட்டுநர் ரவியை பெட்ரோல் ஊற்றி கொலை செய்தது நேருநகரை சேர்ந்த பூபாலன் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்