ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட நடராஜர் சிலைக்கு... ஆருத்ரா தரிசனம்.. மேளதாளம் முழங்க மக்கள் தரிசனம்

Update: 2023-01-07 02:56 GMT

ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, அரியலூர் மாவட்டம் ஸ்ரீ புரந்தான் கிராமத்தில் திருடப்பட்டு, ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்ட நடராஜர் உலோக சிலை சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.

ஸ்ரீ புரந்தான் பிரகதீஸ்வரர் கோயிலில் திருடப்பட்டு, அமெரிக்காவில் மீட்கப்பட்ட நடராஜர் உலோக சிலை, ஜெயங்கொண்டம் அருகே குருவாளப்பர் கோயிலில் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டது. இதனிடையே, ஆருத்ரா தரிசனத்தை ஒட்டி, நடராஜர் சிலை, சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகர் ஆகிய உலோக சிலைகள் புரந்தான் கிராமத்துக்கு கொண்டு வரப்பட்டன. பின்னர், நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மேள தாளம் முழங்க வீதி உலா நடைபெற்றது. அப்போது, கிராம மக்கள் ஏராளமானோர் படையலிட்டு தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்