இந்திய ராணுவ விமானத்தில் சாகசம் - அசத்திய தமிழக பெண்

Update: 2022-12-05 16:11 GMT

டெல்லியில் நடைபெற்ற என்சிசி பயிற்சி போட்டியில் ராணுவ விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்த சாகச நிகழ்ச்சியில், தமிழ்நாட்டை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரும் கலந்து கொண்டு சான்றிதழ் பெற்றுள்ளார்.

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள அரசு கல்லூரியை சேர்ந்தவர் தேசிய மாணவர் படை மாணவி கோகிலவாணி.

இவர், சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற தேசிய மாணவர் படை பாரா கேம்ப் பயிற்சியில் தமிழகத்தில் இருந்து கலந்து கொண்ட ஒரே பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

அங்கு இந்திய ராணுவ பயிற்சி விமானத்தில், சுமார் 2 கிலோ மீட்டர் உயரம் பறந்து பாராசூட் மூலம் குதித்து சாகசம் செய்த அணியில் இடம் பெற்று சான்றிதழ் பெற்றுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்