விவசாயிகளுக்கு நம்பிக்கை கொடுத்த நடிகர் கமல்ஹாசன்

Update: 2023-06-13 01:52 GMT

நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய நிர்வாகிகள் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்தனர். அப்போது அவர்களிடம் பேசிய கமல்ஹாசன், பாரம்பரிய வேளாண்மையையும், தானியங்களையும், நீர்நிலைகளையும் மீட்டெடுக்க வேண்டும் எனவும், இது எனது கடமையாக உணர்வதாகவும் தெரிவித்தார். பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்க தன்னால் முடிந்த உதவிகளை செய்வேன் என உறுதி அளித்த கமல்ஹாசன், வரும், 17 மற்றும் 18ஆம் தேதிகளில் நடக்கும் தேசிய நெல் திருவிழாவில் தமிழ் நிலத்தின் அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் கட்டாயம் கலந்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்