திமுக தலைவர்கள் மீது அவதூறு பரப்பியதாக குற்றச்சாட்டு.. நாம் தமிழர் கட்சி பிரமுகர் கைது

Update: 2022-09-04 12:15 GMT

தூத்துக்குடி மாவட்டம் பிரண்டார்குளத்தை சேர்ந்த நாம் தமிழர் கட்சி பிரமுகர் ஞானராஜ் மலேசியாவில் பணியாற்றி வந்துள்ளார்.

இவர் திமுக தலைவர்கள் குறித்து சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து அவதூறு பரப்பி வந்ததாக கூறப்படுகிறது.

விடுமுறைக்காக தற்போது சொந்த ஊருக்கு திரும்பிய ஞானராஜை தூத்துக்குடி போலீசார் கைது செய்தனர்.

பின்னர் நீதிபதியிடம் ஆஜர்படுத்தப்பட்ட ஞானராஜ், தனக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அதற்காக மருந்து எடுத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து ஞானராஜை மருத்துவமனையில் பரிசோதனை செய்த பின்பு ஆஜர் படுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்