தண்ணீர் குடிக்கும் போது புரையேறி உயிரை விட்ட குழந்தை - பெற்றோர்களே மிக கவனம்

Update: 2023-04-25 10:56 GMT

பர்கூரில் தண்ணீர் குடிக்கும்போது புரையேறி மயக்கம் அடைந்த ஒன்றரை வயது குழந்தை, பரிதாபமாக பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை சேர்ந்தவர் சூர்யா. இவரது ஒன்றரை வயது குழந்தை அகன் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தபோது புரையேறி திடீரென மயங்கி விழுந்தார். இதனிடையே குழந்தையை பர்கூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், வரும் வழிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்களின் பரிசோதனையில் தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்