14 வயது சிறுமியை கடத்திய 40 வயது நபர் -கடலூரில் அதிர்ச்சி சம்பவம்

Update: 2022-10-08 15:11 GMT


14 வயது சிறுமியை கடத்திய 40 வயது நபர் -கடலூரில் அதிர்ச்சி சம்பவம்

கடலூரில் 14 வயது சிறுமியை கடத்திச் சென்ற 40 வயது நபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே 10ம் வகுப்பு படித்து வரும் மகளை காணவில்லை என அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.

இதுக்குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிரமாக தேடி வந்த நிலையில், தராசூரம் பகுதியைச் சேர்ந்த ராஜ் என்பவர், சிறுமியை கடத்தி சென்றது, தெரியவந்தது,.

இதனை தொடர்ந்து, அவரை கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்