கிரேனில் வந்த 15 அடி உயர ராட்சத மாலை..! ஊரே வியந்த தாய் மாமன் சீர் வரிசை..!

Update: 2023-07-23 14:14 GMT

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில், காதணி விழாவில், தாய் மாமன் சீராக 15 அடி உயர ராட்சத மாலையை கொண்டு வந்தவரின் பாசச் செயலை கண்டு அப்பகுதி மக்கள் ஆச்சரியமடைந்தனர். புன்னை பகுதியை சேர்ந்த நபர் ஒருவர், காதணி விழாவிற்கு சீராக வழங்க 15 அடி ராட்சத

மாலை செய்துள்ளார். பின்னர் அதனை கிரேன் உதவியுடன் எடுத்து வந்ததுடன், சீர் வரிசை பொருட்களை டிராக்டரில் வைத்து ஊர்வலமாக எடுத்து சென்றார். அவரின் செயலை கண்டு ஊரார் நெகிழ்ச்சியடைந்து நிலையில், ஊர்வலத்தால் போக்குவரத்தும் சிறிது பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்