13 வயது சிறுமியின் 4 மாத குழந்தையை தீ வைத்து கொளுத்தி பயங்கரம்.. போக்சோவில் கைதானவர்களின் கொடூர செயல் - உ.பி.-யை அதிர வைத்த சம்பவம்

Update: 2023-04-18 11:06 GMT

உண்ணாவ் பகுதியில் வசித்து வந்த 13 வயது பட்டியலின சிறுமி, கடந்த ஆண்டு ஐந்து இளைஞர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஐந்து இளைஞர்களும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணுக்கு கடந்த ஜனவரியில் குழந்தை பிறந்தது.

இதனிடையே இந்த வழக்கில் ஜாமினில் வெளியே வந்த அமன் மற்றும் சதீஷ் ஆகிய இளைஞர்கள், தங்கள் மீதான புகாரை திரும்ப பெறும்படி, அந்த சிறுமியை மிரட்டியுள்ளனர்.

இதற்கு அவர் மறுப்பு தெரிவித்த நிலையில், அவரையும், அவரது தாயாரையும் தாக்கிய இளைஞர்கள், சிறுமியின் குழந்தை மற்றும் அவரது சகோதரியின் குழந்தை தூங்கிக் கொண்டிருந்த ஷெட்டிற்கு (shed) தீ வைத்துவிட்டு சென்றனர்.

இதில் தீக்காயங்களுடன் இரு பச்சிளம் குழந்தைகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் கேட்போரை பதைபதைக்க வைத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்