பாஜக பிரமுகர் மீது காயத்ரி ரகுராம் பரபரப்பு புகார்

Update: 2023-01-30 02:16 GMT

ராணிப்பேட்டை மாவட்ட பாஜக பிரமுகர் மீது முன்னாள் பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராம், ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார்.

ராணிப்பேட்டை பாஜக பிரமுகர் பாபு என்பவர், தனது புகைப்படத்தை மாப்பிங் செய்து தவறாக பயன்படுத்துவதாக, புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சைபர் கிரைம் போலீசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்