பண்ணை வீட்டில் அமெரிக்காவின் உச்சபட்ச சீக்ரெட் ஃபைல்ஸ்.. அதிரும் வெள்ளை மாளிகை

Update: 2024-05-09 03:09 GMT

2021 ஜனவரியில் அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து விலகிய டிரம்ப், அமெரிக்க அரசின் ரகசிய ஆவணங்களை, வெள்ளை மாளிகையில் இருந்து சட்ட விரோதமான முறையில் எடுத்துச் சென்றார் என்று புகார்கள் எழுந்தன. 2022இல் அவரின் புளோரிடா பண்ணை விட்டை சோதனை செய்த அமெரிக்க உளவுத் துறை, அங்கிருந்து பல்வேறு அமெரிக்க அரசின் ரகசிய ஆவணங்களை கைபற்றியது.

இதைத் தொடர்ந்து டிரம்ப் மீது குற்ற வழக்கு

பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை மே 20 அன்று தொடங்க உள்ள நிலையில், மாவட்ட நீதிபதி ஐலீன் கேனன், வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடமால், கால வாரையின்றி ஒத்தி வைத்துள்ளார். நவம்பர் 5இல் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பு இந்த வழக்கு விசாரணை தொடங்காது என்பதால்

இது டிரம்பிற்கு சாதகமாக மாறியுள்ளது. நீதிபதி ஐலீன் கேனன் டிரம்பினால் 2020இல் நியமிக்கப்பட்டவர்என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்