நடுக்காட்டில் காரில் கிடந்த சடலம் - அமெரிக்காவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த கொடூரம்!

Update: 2024-03-19 03:38 GMT

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் புரிபாலம் பகுதியைச் சேர்ந்த பாஸ்டன் பல்கலைக்கழக மாணவரான பருச்சுரி அபிஜித் என்பவரின் சடலம் மசாச்சுசெட்ஸ் வனப்பகுதியில் காரில் கண்டெடுக்கப்பட்டது. 23 வயதான அபிஜித் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்து வந்தார். கடந்த ஆண்டு பாஸ்டன் பல்கலைக் கழகத்தில் சேர்ந்த இவர், தனது வகுப்பு தோழர்களுடன் வாடகை வீட்டில் தங்கி இருந்தார். அபிஜித் தனது வகுப்பை முடித்து விட்டு கடந்த 11ம் தேதி வீட்டிற்குக் கிளம்பியுள்ளார். ஆனால் அவர் வீடு திரும்பாத நிலையில், கவலையடைந்த நண்பர்கள் காவல்துறைக்குத் தகவல் அளித்துள்ளனர். போலீசார் அவரது மொபைல் சிக்னலை பின் தொடர்ந்ததில் அபிஜித் அருகிலுள்ள காட்டில் சடலமாக மீட்கப்பட்டார். மார்ச் 11ம் தேதி பல்கலைக்கழக வளாகத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் பருச்சுரி அபிஜித் கொல்லப்பட்டு, உடல் காருக்குள் கிடத்தி காட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்