ஸ்கூலுக்கு செல்லாமல் பார்க் சென்ற மாணவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு - 5 பேருக்கு நேர்ந்த கதி

Update: 2024-04-20 06:22 GMT

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் கிரீன்பெல்ட் நகர பூங்காவில் மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கூடியிருந்த நிலையில், அங்கு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 5 மாணவர்கள் படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... போலீசார் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், தப்பியோடிய குற்றவாளியைத் தேடி வருகின்றனர்... 2 உயர்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த இறுதியாண்டு மாணவர்கள் 500 முதல் 600 பேர் "சீனியர் ஸ்கிப் டே" வை ஒட்டி பள்ளிகளுக்குச் செல்லாமல் வகுப்புகளைப் புறக்கணித்து விட்டு பூங்காவில் கூடியிருந்த சமயத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்