ஈவு இரக்கமின்றி உணவுக்காக நின்ற மக்கள் மீது துப்பாக்கி சூடு..! உடல்ளை கழுதையில் கொண்டு சென்ற கொடூரம்... கதறும் காஸா - இஸ்ரேல் சொன்ன பதில்

Update: 2024-03-01 03:12 GMT

காசா நகரில் உணவு உள்ளிட்ட உதவி பொருட்களை வாங்குவதற்காக திரண்ட மக்கள் மீது இஸ்ரேலிய ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 104 பேர் உயிரிழந்ததாகவும், 280 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் காசா சுகாlதாரத்துறை அதிகாரிகள் புகார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் கழுதை வண்டியில் கொண்டு செல்லப்பட்டு புதைக்கப்பட்டன. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே காசாவில் காத்திருந்த மக்கள் மீது தாக்குதல் எதுவும் நடத்தவில்லை என்றும் , கூட்ட நெரிசலே உயிரிழப்புக்கு காரணம் என்றும் இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார். இந்நிலையில் காசா தாக்குதல் குறித்து கருத்து கூறியுள்ள அமெரிக்க அதிபர் ஜோபைடன் இது இஸ்ரேல் - ஹமாஸ்

Tags:    

மேலும் செய்திகள்