2024ல் நடந்த உலக பேரழிவு.. வீட்டு கூரையில் சிக்கிய குதிரை.. நெஞ்சை கனக்க செய்யும் காட்சி

Update: 2024-05-10 06:35 GMT

பிரேசிலில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட பெருவெள்ளத்தில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சம் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. இரண்டு லட்சம் பேர் அவர்களது இருப்பிடங்களை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்பட்டுத்தப்பட்டுள்ளனர். கனோவாஸ் பகுதியில் வெள்ளம் காரணமாக கூரையில் சிக்கிய குதிரை தீயணைப்பு வீரர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்களின் கூட்டுக் குழுவால் மீட்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்