மறைந்த ஹைத்தி அதிபரின் இறுதிச் சடங்கு - கலவரங்களுக்கு மத்தியில் நடந்த நிகழ்வு

ஹைத்தி அதிபர் ஜொவெனல் மொயிஸ், நாட்டு மக்களுக்காக உயிரிழந்ததாக அவரது மகன், தன் தந்தையின் இறுதிச் சடங்கில் வருத்ததோடு தெரிவித்தார்.

Update: 2021-07-24 08:37 GMT
ஹைத்தி அதிபர் கடந்த சில தினங்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவரது  இறப்புக்கு நீதி கேட்டு ஏராளமான மக்கள் தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்தியதுடன், வன்முறைச் சம்பவங்களும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்த கலவரங்களுக்கு மத்தியில் அவரது இறுதிச் சடங்கு நிகழ்ச்சி நடந்த நிலையில், பல உயர் அதிகாரிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக வாகனத்தின் உள்ளேயே அமர வைக்கப்பட்டனர். இந்நிகழ்வில் உரையாற்றிய மறைந்த அதிபரின் மனைவி மார்ட்டின் மோயிஸ், தனது கணவரின் இறப்புக்கு நீதி கேட்டு உரையை நிறைவு செய்தார். மேலும், மறைந்த அதிபரின் கல்லறை அவரது தந்தையின் கல்லறைக்கு அருகிலேயே அமைக்கப்பட்டது குறிப்பிடத்தகக்து.

Tags:    

மேலும் செய்திகள்