சொகுசு உணவகத்தில் நடந்த குண்டுவெடிப்பு - அதிவிரைவாக சரிசெய்யப்பட்ட சேதங்கள்

பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணமானத்தின் தலைநகரான குவெட்டாவில் உள்ள சொகுசு உணவகம் ஒன்றில் கடந்த புதன்கிழமை நடந்த வெடிகுண்டு விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்

Update: 2021-04-25 10:46 GMT
பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணமானத்தின் தலைநகரான குவெட்டாவில் உள்ள சொகுசு உணவகம் ஒன்றில் கடந்த புதன்கிழமை நடந்த வெடிகுண்டு விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். உணவகத்தின் கார் நிறுத்தும் இடத்தில், காரில் இருந்த வெடிகுண்டு வெடித்து கடும் சேதங்கள் ஏற்பட்டன. இதையடுத்து, அடுத்த 3 நாட்கள் ஹோட்டலின் சேதமடைந்த பகுதிகள் அனைத்தும் அதிவிரைவாக சரிசெய்யப்பட்டு இயல்பு நிலைக்குத் திரும்பியது. இந்நிலையில் வழக்கம்போலவே பொதுமக்கள் அந்த உணவகத்திற்கு வரத் தொடங்கியுள்ளனர். இது குறித்து உணவக மேலாளர் தெரிவிக்கையில், பலுசிஸ்தானியர்கள் தீவிரவாத அச்சுறுத்தலுக்கெல்லாம் அஞ்சாதவர்கள் என்றும், அவர்கள் எப்போதும் போலவே இயல்பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்