கொரோனா அச்சம்- வடகொரிய ஒலிம்பிக்கிலிருந்து விலகல்
இந்தாண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கொரோனா காரணமாக வட கொரியா பங்கேற்காது என அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது
இந்தாண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கொரோனா காரணமாக வட கொரியா பங்கேற்காது என அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள வட கொரிய விளையாட்டு அமைச்சகம், ஜப்பானின் டோக்கியோவில் நடைபெறவுள்ள 32வது ஒலிம்பிக் போட்டிகளில், கொரோனா பெருந்தொற்று காரனமாக விளையாட்டு வீரர்களின் உடல்நலன் கருதி பங்கேற்கப்போவதில்லை என தகவல் தெரிவித்துள்ளது.