சட்ட விரோதமாக மீனவர்கள் யார் நுழைந்தாலும் நடவடிக்கை - இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் எச்சரிக்கை

சட்ட விரோதமாக இலங்கை கடற்பகுதியில் நுழையும் மீன்பிடி படகுகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கை கடுமையாக்கப்படும் என அந்நாட்டு மீன்வளத்துறை அமைச்சர் காஞ்ஜன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

Update: 2021-02-23 04:20 GMT
சட்ட விரோதமாக இலங்கை கடற்பகுதியில் நுழையும் மீன்பிடி படகுகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கை கடுமையாக்கப்படும் என அந்நாட்டு மீன்வளத்துறை அமைச்சர் காஞ்ஜன விஜேசேகர தெரிவித்துள்ளார். இலங்கை உள்நாட்டு படகுகள் மற்றும் தங்கள் கடற்பரப்பில் நுழையும் வெளிநாட்டு படகுகளை கண்காணிக்க ஆஸ்திரேலியாவில் இருந்து சிறப்பு கருவிகளை கொள்முதல் செய்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். அவற்றை இலவசமாக தருவதாகவும்,  நான்காயிரத்து 200 இயந்திரங்களை எதிர்வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்துக்கு வழங்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார். 
Tags:    

மேலும் செய்திகள்