இலங்கை அரசுக்கு எதிராக பேரணி - தமிழ் அமைப்பினர் ஏராளமானோர் பங்கேற்பு

இலங்கையில் சிறுபான்மை சமூகங்களுக்குக்கு எதிராக அடக்குமுறையை கையாளவதாக இலங்கை அரசை கண்டித்து பல்வேறு அமைப்பினர் பேரணியில் ஈடுபட்டனர்.

Update: 2021-02-04 06:28 GMT
இலங்கையில் அரசு தரப்பில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாகவும், இதுகுறித்து சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் விதமாக எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், தமிழ் தேசிய கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள் உட்பட ஏராளமான அமைப்புகள் பங்கேற்றன. காவல்துறை தடையை மீறி நடைபெற்ற பேரணியில், கொட்டும் மழையிலும் பொத்துவிலில் இருந்து மட்டக்களப்பை வரை ஏராளமானோர் பேரணி சென்றனர்.  சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக இலங்கை அரசு அடக்குமுறையை கையாள்வதாக போராட்டத்தில் ஈடுபட்ட அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.
Tags:    

மேலும் செய்திகள்