"கொரோனாவில் இருந்து மீள ஆரம்பமாக அமையட்டும்" - பிரதமர் ராஜபக்சே வெளியிட்ட தீபாவளி வாழ்த்து
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இலங்கை வாழ் இந்து மக்களுக்கு பிரதமர் மகிந்த ராஜபக்சே வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இலங்கை வாழ் இந்து மக்களுக்கு பிரதமர் மகிந்த ராஜபக்சே வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில், அருட் தீபமாகிய ஆன்மீக ஞான ஒளியை இறை வழிபாடு மூலம் பெறும் சிறப்பு வாய்ந்த நன்னாளே தீபாவளித்திருநாள் என கூறியுள்ளார். இதே போல, இலங்கை மக்களை கொரோனா நோயில் இருந்து மீள்வதற்கும், நல்ல எதிர்காலம் ஆரம்பமாகவும் இந்த தீபாவளி திருநாள் அமையட்டும் என ராஜபக்சே வாழ்த்து தெரிவித்தார்.