பாகிஸ்தான் குடிமக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க வேண்டும் - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தல்

பாகிஸ்தான் குடிமக்களின் அடிப்படை உரிமைகளை அந்நாட்டு அரசு பாதுகாக்க வேண்டும் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சான் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2020-11-12 11:29 GMT
பாகிஸ்தான் குடிமக்களின் அடிப்படை உரிமைகளை அந்நாட்டு அரசு பாதுகாக்க வேண்டும் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சான் வலியுறுத்தியுள்ளார். பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் அகமது கான், பாகிஸ்தானில் அகமதி பிரிவினர் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெறுவதை பற்றியும், அதை தடுக்க பிரிட்டன் அரசு குரல் கொடுக்க வேண்டும் என்றும் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்து பேசிய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்,  பிரிட்டனின் தெற்காசிய துறை அமைச்சர், பாகிஸ்தான் அரசிடமும், அனைத்து குடிமக்களின் அடிப்படை உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாக கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்